Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 28 January 2014

சத்துணவு சாப்பிட்ட 140 மாணவர்கள் திடீர் மயக்கம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ளது மோலையனூர். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று மதியம் வழக்கம் போல், சுமார் 1.30 மணி அளவில், 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சத்துணவு சாப்பிட்டுள்ளனர். 3 மணியளவில் மாணவ, மாணவிகள் கும்பல் கும்பலாக மயக்கமடைந்தனர். அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியர், ஆசிரியைகள் மயக்கமடைந்த 140 மாணவ,மாணவிகளை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அனைவருக் கும் உடனடியாக குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment