Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 27 January 2014

மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை


மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்களை காட்டி, சிலர், உயர்கல்வி மற்றும் அரசு பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதை தவிர்க்க, அவர்களின் பிளஸ் 2, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பப்பட்டு, உண்மைத் தன்மை சான்று பெறப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை, அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பும்போது, வகுப்புக்கு தகுந்தாற்போல், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம், அனுப்ப வேண்டும். ஆனால், சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்கள், நேரடியாக, அரசு தேர்வுத் துறைக்கு சான்றிதழ்களை அனுப்பிவைத்து, உண்மைத் தன்மை சான்றை பெற்று வருகின்றனர். இதனால், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, விதிமுறையை மீறி, மதிப்பெண் சான்றிதழ்களை நேரடியாக அனுப்பி வைக்க கூடாது என, தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை 
இயக்குனர் தேவராஜன் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment