Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 27 January 2014

சத்துணவு அரிசி மூட்டைகள் பதுக்கல் : அமைப்பாளர் கைது

 நாகையில், நான்கு, சத்துணவு அரிசி மூட்டைகளை, பதுக்கி வைத்திருந்த, சத்துணவு அமைப்பாளரை, போலீசார் கைது செய்தனர். நாகையில், பள்ளி குழந்தைகளின் மதிய உணவிற்காக, அரசால் வழங்கப்படும், பொது வினியோக திட்ட அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக, ஆட்சியர் முனுசாமிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, ஆட்சியர் உத்தரவுப்படி, நாகை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான போலீசார், தலைஞாயிறு அடுத்த பிரிஞ்சுமூலை பகுதியில், சோதனை நடத்தினர். பிரிஞ்சுமூலை அரசு துவக்கப் பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியில் இருக்கும், ராமலிங்கம், 57, தனது வீட்டில், பொது வினியோகத் திட்டத்திற்கான, நான்கு அரிசி மூட்டையை, வெளி மார்க்கெட்டில், விற்பனை செய்வதற்காக, பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, போலீசார், நான்கு அரிசி மூட்டைகளை, பறிமுதல் செய்து, ராமலிங்கத்தை கைது செய்தனர். 

No comments:

Post a Comment