Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 30 January 2014

செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் அரசுமருத்துவமனையில் பணியாற்ற தடை

தமிழகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளை, போராட்டம் முடியும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என, அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் அரசு செவிலியர் பள்ளியில் படித்து முடித்தவர்களுக்கும், தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கும் அரசு தேர்வு நடத்தி வேலைவாய்ப்பளிக்க வேண்டும், என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் வகுப்புகளில் அமர்கின்றனர். மற்ற நாட்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில் தனியார் செவிலியர் பள்ளியில் படிப்பவர்கள் வாரத்தில் 2 மணி நேரம் தான் மருத்துவமனை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். மற்ற நாட்களில் வகுப்புகளில் அமர்கின்றனர். இதனால் தனியார் செவிலியர்கள் அரசு தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறுவார்கள். இதனால் முன்பிருந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கூறி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் வார்டு பணிகளை புறக்கணித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், செவிலியர் மாணவிகளை அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். வகுப்புகளை மட்டும் நடத்துங்கள் என அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment