Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 30 January 2014

அறிவு சார்ந்த சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: கவர்னர் பேச்சு

''அறிவு சார்ந்த சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்,'' என, தமிழக கவர்னர், ரோசய்யா, பள்ளி விழாவில் பேசினார்.

கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியின், 150ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. விழாவிற்கு, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர், ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளியின், 150ம் ஆண்டு, நினைவு வளைவு கல்வெட்டை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், வாசன் திறந்து வைத்தார். விழா மலரை, தமிழக கவர்னர், ரோசய்யா வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தில் உள்ள, 150ம் ஆண்டு விழாவை, கடந்த, சில பள்ளிகளில், இதுவும் ஒன்று. 21ம் நூற்றாண்டில், அறிவு சார்ந்த சமுதாயத்தை, ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றம், தற்போதுள்ள, தலைமுறையிடம், நாம் எதிர்பார்க்க வேண்டியிருப்பதால், அதற்கேற்ற வகையில், மாணவர்களிடம், அன்பு, நேர்மை, அறிவு ஆகியவற்றை, ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு, நாம் கண்டுபிடிக்கும் திறனில் தான் உள்ளது. எனவே, மாணவர்கள், கடின உழைப்புடன், தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment