Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 30 January 2014

'இன்டர்னல்' மதிப்பெண் மாற்றம்: தேர்ச்சி சதவீதம் குறைந்தது

அண்ணா பல்கலைக் கழகம், அகத்தேர்வு (இன்டர்னல்) மதிப்பெண்கள் வழங்குவதில், மாற்றம் கொண்டு வந்ததையடுத்து, இந்த ஆண்டு, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

தமிழகத்தில், 550 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில், செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின், தேர்வுகளில், 20 மதிப்பெண்கள், அகத்தேர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்களை, அந்தந்த கல்லூரிகளே, மாணவர்களுக்கு வழங்கி வந்தன. இந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம், அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்குவதில், மாற்றத்தைக் கொண்டு வந்தது. தற்போது, அகமதிப்பீடு மதிப்பெண்களை, மூன்று அகமதிப்பீடு தேர்வுகள் மற்றும் வருகைப் பதிவேடு ஆகியவற்றிக்கு, கணக்கிட்டு வழங்கியுள்ளது. அதாவது, ஒரு தேர்வுக்கு, 5 மதிப்பெண்கள் வீதம், 3 தேர்வுகளுக்கு, 15 மதிப்பெண்களும்; வருகைப் பதிவேட்டிற்கு, 5 மதிப்பெண்களும் சேர்த்து, 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. முன்னர், 45 சதவீதம், வருகைப் பதிவு இருந்தாலே, முழு மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது, 75 சதவீதத்திற்கும் கீழ், வருகை தந்த மாணவர்களுக்கு, பூஜ்ஜியம் மதிப்பெண்ணும், 76 - 80 சதவீதம் வருகைக்கு, 1 மதிப்பெண்ணும், 81 - 85 சதவீதத்திற்கு, 2 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. இந்த புதிய நடைமுறையில், அகத்தேர்வில், குறைந்த மதிப்பெண்களையே, மாணவர்களால் பெற முடிகிறது. இதன் விளைவாக, அண்மையில், வெளியான தேர்வு முடிவில், முதலாமாண்டு மாணவர்களைத் தவிர, மற்ற மாணவர்களின், தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

No comments:

Post a Comment