Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 27 January 2014

கோரிக்கையை ஏற்காவிட்டால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:அரசாணை 720ல் மாற்றம் செய்து உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினோம்.ஆனால் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை இல்லை. அதனால் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே முதுநிலை பட்டதாரிகள் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment