Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 10 January 2014

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவியர் வாந்தி, மயக்கம்

 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மறவர்பெருங்குடி அரசு உயர்நிலை பள்ளியில், சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இங்குள்ள பள்ளிகளுக்கு, தமிழக அரசின் வளரும் இளம்பெண்களுக்கான இரும்பு சத்து மாத்திரை, ஒவ்வொரு வியாழக்கிழமை, சுகாதார துறையின் மூலம் கொடுப்பது வழக்கம். நேற்று, திருச்சுழி மறவர்பெருங்குடி அரசு உயர்நிலை பள்ளியில், சத்து மாத்திரை சாப்பிட்ட, 10க்கு மேற்பட்ட மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினரால், பள்ளியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர், பள்ளிக்கு விரைந்தனர். மாணவியர் நலமுடன் இருப்பதாக, பள்ளி தரப்பில் கூறப்பட்டது. சத்து மாத்திரை, ஒரு சிலருக்கு ஒத்து கொள்ளாததால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவ குழுவினர் தெரிவித்தாக, ஊராட்சி தலைவர் கூறினார்.

No comments:

Post a Comment