Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 23 October 2013

செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது

செப்டம்பர் / அக்டோபர் 2013ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மேல்நிலைத் தேர்வினை "சிறப்பு அனுமதி திட்டம்" (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.


 தேர்வு துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய நடைமுறைகளினால் , கடந்த ஆண்டை விட இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment