Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 14 January 2014

கல்வி உதவித்தொகைக்கு 20க்குள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்


திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட கிறிஸ்தவ இனத்தை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகையை பெற இம்மாதம் 20ம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.  
கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் கிறிஸ்த்துவ இனத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வங்கிக் கணக்கில் மட்டும் வரவு வைக்கப்படும். ஆகையால் அனைத்து மாணவர்களும் ஜனவரி 20ம் தேதிக்குள் வங்கி கணக்கு துவங்கி அதன் விவரத்தை சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் அனைத்து கல்லூரி முதல்வர்களும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு உரிய ஆன்லைன் பதிவுகளை இம்மாதம் 20ம் தேதிக்குள் முடித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட கிறிஸ்துவ இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒப்பளிப்பு செய்வதற்கு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 20 ம் தேதி  கடைசி நாளாகும்.

No comments:

Post a Comment