பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்கள் டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சி.இ.ஓ., மார்ஸ் அறிவுரை கூறினார்.கச்சிராயபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.கச்சிராயபாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.
இதில் பிளஸ் 2 வகுப்பில் 225 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சி.இ.ஓ., மார்ஸ் மற்றும் டி.இ.ஓ., தனமணி ஆகியோர் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தனர்.பள்ளியில் பொதுத்தேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவிகளிடம் சி.இ.ஓ., மார்ஸ் பேசுகையில், ாவட்டத்தில் 16 அரசு பெண்கள் பள்ளிகளில் உள்ள 4,700 மாணவிகள் உட்பட மற்ற பள்ளிகளைச் சேர்ந்த 37 ஆயிரம் மாணவிகள் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதவுள்ள அனைவரும் டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். நேரத்தை முறையாக பயன்படுத்தி அதிக மதிப்பெண் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment