Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 15 February 2014

மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்த பயிற்சி

பள்ளியில் படிக்கும் மாணவியர்கள் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்கும் நோக்கில், பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி, மாநிலம் முழுக்க உள்ள ஆசிரியர்கள், மாணவியருக்கு பயிற்சி, விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப் பட்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சார்பில், மாவட்டத்தில் உள்ள வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு, முதற் கட்டமாக நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.


அதன்படி, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி வட்டார ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை, கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வசந்தா துவக்கி வைத்தார்.


இந்த பயிற்சியில், ஆசிரியப் பயிற்றுனர்கள் எழிலரசன், அம்சவேணி ஆகியோர் பயிற்சி வழங்கினர். வகுப்பறைகளில் மாணவியர்க்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், ஆசிரியர்களின் அணுமுறையை அறிதல், புகார் அளித்தல் உட்பட விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.


மேலும், "பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, பள்ளி குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும், அல்லது ஆசிரியர் அல்லது தலைமையாசிரியருக்கு புகார் வழங்க வேண்டும் என்பது விளக்கி கூறப்பட்டது.


மேலும், மாணவியரிடமிருந்து தாங்கள் பேரும் மனுவை அடுத்த 24 மணி நேரத்துக்குள், ஆசிரியர்கள் அந்த புகார் மனு குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கும், கல்வி துறை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், அந்த மனுவை, துறை சார்ந்த இணை இயக்குனர், 30 நாளுக்குள் நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரித்து, தீர்வு காண வேண்டும்' என்பன உட்பட விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பயிற்சி பெற்ற ஆசிரியப் பயிற்றுனர்கள் வரும் 22-ம் தேதி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவர்கள்.

No comments:

Post a Comment