Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 February 2014

மலைப்பகுதி ஊழியர்களுக்கு பணிப்படி உயர்வு


 மலைப்பகுதியில் பணிபுரியும், அரசு ஊழியர்களுக்கு, பணிப்படி மற்றும் குளிர்காலப் படியை, உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில்நடந்த, கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதா, "மலைப்பகுதியில் பணிபுரியும், அரசு ஊழியர்களுக்கு, மலை பணிப்படியாக மாதம், 1,500 ரூபாய், குளிர்காலப் படியாக, 500 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்தார்.
அதன்படி, மலையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கேற்ப, 900 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாய் வழங்கவும், குளிர்காலப் படியாக, கடல் மட்டத்தில் இருந்து, 1,000 மீட்டர் உயரத்தில் இருந்து, 1,499 மீட்டர் உயரம் உள்ள, மலைப்பகுதியில் பணிபுரிவோருக்கு, அதிகபட்சமாக மாதம், 450 ரூபாய்; 1,500 மீட்டர் உயரத்திற்கு மேல் வசிப்÷ பாருக்கு, அதிகபட்சமாக மாதம், 500 ரூபாய், உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment