Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 22 October 2013

குரூப்–1 தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்

25, 26, 27 தேதிகளில் நடைபெறும் குரூப்–1 தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டாளர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வருகிற 25, 26, 27 தேதிகளில் சென்னையில் குரூப்–1 மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து பொது அறிவுத்தாள் 1, 2, 3 ஆகியவற்றில் விடைகளை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விடையளிக்கலாம். ஒரு பகுதி தமிழிலும் மறு பகுதி ஆங்கிலத்திலும் கூட விடையளிக்கலாம்.
ஆனால் பொது அறிவுத்தாள் 2–ல் உள்ள பகுதி–2 தமிழ் மொழி, அல்லது ஆங்கில மொழி பகுதியை பொறுத்தமட்டில் இவ்விரண்டில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து விடை அளிக்க வேண்டும். இது குறித்து சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail,com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மைய தொலைபேசி எண் 1800 425 1002 மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment