Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 4 January 2014

கல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழகம்

கல்வித் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச வினா-விடைப் புத்தகம் வழங்கும் விழா மற்றும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம், திருப்பூர் மாவட்டம், உடுமலை ஜி.வி.ஜி. கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில்,மாணவ, மாணவிகளுக்கு வினா-விடைப் புத்தகங்களை வழங்கி, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது: தேர்வுகளை எப்படி அணுக வேண்டும், எந்தெந்த வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுடன் உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல்களும் இதில் அடங்கியுள்ளன. அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், காலணி, புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் மேல் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment