Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 20 February 2014

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்.25, 26-இல் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 25, 26-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
அமைப்பின் நாமக்கல் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அதன் மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமையில் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலர் பெ.சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; பகுதிநேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும்; கல்வித் துறை அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் வருகிற 25-ஆம் தேதி கருப்புப் பட்டை, கோரிக்கை அட்டை அணிந்து பள்ளி உள்ளிருப்பு போராட்டமும், 26-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
இதேபோல, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்; ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருப்போருக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் மார்ச் 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment