Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 20 February 2014

புத்தகம் கொண்டு வராததை, ஆசிரியர் கண்டித்ததால், தீக்குளித்த பள்ளி மாணவன்

:புத்தகம் கொண்டு வராததை, ஆசிரியர் கண்டித்ததால், தீக்குளித்த பள்ளி மாணவன், ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த முத்து மகன் விக்னேஷ்குமார்,14. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கிறார். ஆங்கிலம், கணக்கு புத்தகங்கள் கொண்டு வராததால், வகுப்பாசிரியர் கண்டித்து, மாணவனை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியுள்ளார்.நாளை புத்தகத்தை கொண்டு வராவிட்டால், பெற்றோருடன் வந்து தலைமை ஆசிரியரை சந்திக்க வேண்டும், என கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவன், பள்ளி முடிந்த பின், வீட்டிற்கு சென்று, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றிய மாணவனை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இதை தெரிவித்து உள்ளார். இந்நிலையில் மாணவன் தீக்குளித்த செய்தி பரவியதால், மாணவர்களும், உறவினர்களும், நேற்று இரவு பள்ளி முன், மறியலில் ஈடுபட்டனர். கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர். 

No comments:

Post a Comment