Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 11 May 2014

மதிப்பெண் மறுகூட்டல் விடைத்தாள் நகல் பெற்ற 3 நாளில் விண்ணப்பிக்க வேண்டும்


பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்ற 3 தினங்களுக்குள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பிளஸ்2 விடைத் தாளில் ஒரு விடை மதிப்பீடு செய்யப்படாமல், திருத்தப்படாமல், திருத்தப்பட்டும் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே அந்த விடைக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும். விடைகள் மதிப்பீடு செய்யப்பட்டும் மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்பட்டிருந்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டது. மேலும், மறுகூட்டலில் மதிப்பெண்கள் உயர்ந்தால் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மதிப்பெண்கள் குறைந்தால் பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும். நேரடி யாக மறுகூட்டல் மட்டுமே செய்தால் போதும் என்று விரும்புபவர்கள் விடைத்தாள் நகல் கோர வேண்டாம். அவர்கள், மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்திற்கு ரூ.305, இதரப்பாடங்களுக்கு ஸி205 செலுத்தி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் தாங்கள் பயின்ற பள்ளி மூலமும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய பள்ளி மூலமும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்கள் அறிவிக்கப்படும் தேதியில் தங்கள் விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் உரிய பாட ஆசிரியர்களிடம் அதனை காண்பித்து அவர்களிடம் அனைத்து விடைகளையும் முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற 3 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் தங்களுக்கு மறுகூட்டல் வேண்டுமா அல்லது மறுமதிப்பீடு வேண்டுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துவிட்டு மறுகூட்டலுக்கு கோர முடியாது. அதுபோலவே மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துவிட்டு மறு மதிப்பீட்டிற்கு கோர இயலாது.

ஸ்கேன் நகல் கோரி விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட கடைசி நாளான 14ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு ஸ்கேன் நகல் கோரியவர்களது விண்ணப்பங்கள் மீது உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஜூன் 2ம் தேதிக்குள் அனைத்துப் பாடங்களுக்கும் உரிய விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகைச்சீட்டில் உள்ள குறியீட்டு எண்ணினை பதிந்து தங்களது விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment