Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 17 May 2014

மதுரை மாவட்ட கல்வித்துறையில் நிரம்பும் பணியிடங்கள்

மதுரை மாவட்ட கல்வித்துறையில் பல முக்கிய பணியிடங்கள் பொறுப்பு அலுவலர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக இருந்த ரவி (மேல்நிலை பள்ளிகள்) விருப்ப ஓய்வு பெற்றார். சீனிவாசன் (உயர் நிலை பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார் (தற்போது ஓய்வு).
இப்பணியிடங்களுக்கு குலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லோகநாதன், விரகனுார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கரநாராயணன் ஆகியோர் பொறுப்பு நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.) சீமான் பதவி உயர்வு பெற்று, கிருஷ்ணகிரி எஸ்.எஸ்.ஏ. முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சங்கரநாராயணன் டி.இ.ஓ.வாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இவரிடத்தில் மதுரை சத்தியமூர்த்திநகர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பால்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை ஆய்வாளர் பணியிடங்களும் காலி: அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கும் பள்ளிகள் துணை ஆய்வாளர் பணியிடங்கள் மதுரை, மேலுார், உசிலம்பட்டி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. இப்பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment