Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 28 April 2014

மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு. மே-2ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல்

இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரட்டைப்பட்டம் பயின்றவர்கள் நாட்டின் கடைசி நீதி மன்றமான உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளார்கள். இது சம்பந்தமாக வழக்கினை மே-2ல் தாக்கல் செய்ய உள்ளனர். இதில் சிறப்பு விடுவிப்பு மனுவினை தாக்கல் செய்ய உள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை எனவும் சூளுரைத்தனர். மேலும் நாங்கள் யார் பதவி உயர்வையும் கெடுக்க நினைக்க வில்லை. எங்களுக்கு பறிபோன பதவி உயர்விற்காகவும், நாங்கள் படித்த படிப்பினை மதிப்புள்ளதகவும் மாற்றவே நாங்கள் சட்ட ரீதியான முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் என அவ்வழக்கின் பெறுப்பாளர்கள் தெரிவித்தனர். தங்களைப்பற்றி அவதூறு செய்திகள் பரப்புவர்களுக்கு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு சரியான பதிலடியாக இருக்கும் என நம்மிடம் தெரிவித்தனர். தேர்தல் முடிவிற்கு பின்னால் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க இருக்கும் சூழலில் இவ்வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment