Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 29 April 2014

அரசு பாடபுத்தகம் விற்பனை: மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் சஸ்பெண்டு


திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பழனி கல்வி மாவட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் சிவசண்முகம். இவர் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரசு பழைய பாட புத்தகத்தை தன்னிச்சையாக எடுத்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில் பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடோனில் இருந்து வெளியிடங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்த இளநிலை உதவியாளர் சிவசண்முகத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி கூறியதாவது:–

கடந்த 2005–06–ம் கல்வி ஆண்டுக்கான பாடபுத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கியது போக எஞ்சிய புத்தகங்கள் பழனி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த புத்தகங்கள் அனைத்தும் அரசு செய்தித்தாள் நிறுவனமான டி.என்.பி.எல்.–க்கு செல்லவேண்டியவை.

இதனை இளநிலை உதவியாளர் தன்னிச்சையாக முடிவு செய்து சுமார் 2000 புத்தகங்களை தனியாருக்கு விற்பனை செய்து உள்ளார் என்றார்.

No comments:

Post a Comment