Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 30 April 2014

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்: தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரிகள் கோரிக்கை

ஆசிரியர் தேர்வுவாரியத் தேர்வில், தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியர்களுக்கு உடனே பணி ஆணை வழங்க வேண்டும் என்று அந்தத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிக ளில் காலியாக உள்ள 2800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி. தேர்வு கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர் வில், தமிழ் பாடத்தில் தேர் ச்சி பெற்றவர்களுக்கு மட் டும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பணி ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில், மற்ற பா டத்தில் தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு பணி ஆணை வழங் கப்படவில்லை என தர்ம புரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்க ளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஞா யிறன்று டி.ஆர்.பி. அலுவல கத்திற்கு வந்திருந்தனர்.
இதுகுறித்து, தரும புரியைச் சேர்ந்த முது நிலைப் பட்டதாரி ஆசிரி யர் பாபு கூறுகையில், முது நிலைப்பட்டதாரிகளுக் கான தேர்வில், தேர்ச்சி பெற்ற தமிழ் பாடத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கடந்த மூன்று மாதங்களு க்கு முன்பாக பணி ஆணை வழங்கப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர். நாங்கள் தேர்ச்சி பெற் றும் இதுவரை, இயற்பியல், வேதியியல், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடத் தில் தேர்ச்சி பெற்றவர்களு க்கு பணி ஆணைஇதுவரை யில் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து டி.ஆர்.பியி டம் கேட்டதற்கு, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதன் தீர்வு வந்தபிறகுதான், அதாவது, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில்தான் பணி ஆணைவழங்கப்படும் என்று தெரிவித்துவிட்ட னர்.

No comments:

Post a Comment