Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 27 April 2014

விடைத்தாள் திருத்தும் பணியில் "எஸ்கேப்' ஆசிரியர்கள் பட்டியல் தயாரகிறது.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில், பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ல் துவங்கி 25 வரையும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26ல் துவங்கி, ஏப்., 9 வரையும் நடந்தன. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 2விற்கு, மார்ச் 28 முதல் ஏப்., 12 வரையும், பத்தாம் வகுப்பிற்கு ஏப்., 10 முதல் 22 வரையும் நடந்தன. லோக்சபா தேர்தல் பணிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், தேர்வுத் துறை எதிர்பார்த்த நாட்களுக்குள், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவுறாமல் போனதாக சர்ச்சை எழுந்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கப்பட்டு, வராத ஆசிரியர்கள் "பட்டியல்' கேட்டு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, "ஆன் - லைன்' மூலம் தேர்வு துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்தொடர்ச்சியாக, முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், "ஆன் - லைன்' மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவர பட்டியல் ஒரு வாரத்திற்குள் அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியவில்லை. அப்பணியில் பங்கேற்ற மற்றும் பங்கேற்காத ஆசிரியர் விவரங்களை மாவட்டம் வாரியாக தேர்வுத் துறை கேட்டுள்ளது. பணி ஒதுக்கியும் பங்கேற்காத ஆசிரியர்கள் சரியான விளக்கம் அளிக்காத பட்சத்தில், தேர்வுத்துறை அவர்களை எச்சரிக்கலாம் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார். இதனால், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment