Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 14 December 2013

எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனை?


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும்,முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர்தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாகநியமித்துள்ளது. இதில்,

25 சதவீதம் பேர் முதுகலை ஆசிரியர்கள்.கடந்த 2000ல் துவங்கியஎஸ்.எஸ்.ஏ., திட்ட காலம் 2010ல் முடிந்த நிலையி 3ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கலைத்து,அனைவருக்கும் இடை நிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,)திட்டத்துடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. ஒரு திட்டம் துவங்கி 10 ஆண்டுக்குள்முடிய வேண்டும். சிலகாரணத்திற்காக எஸ்.எஸ்.ஏ., ஓரிரு ஆண்டு நீடிக்கலாம்.தமிழகத்தில் இத்திட்டம் 3 ஆண்டு நீடித்த நிலையில்,இனிமேலும், நீடிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக,கல்வித்துறைஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர.

No comments:

Post a Comment