Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 5 January 2014

தமிழகத்தில் முதன் முறையாக தேசிய புத்தக நிலையம் திறப்பு

 தேசிய புத்தக நிறுவனம், தமிழகத்தில், முதன் முறையாக, சென்னையில் உள்ள கல்வித் துறை வளாகத்தில், புத்தக நிலையத்தை, நேற்று துவக்கியது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கீழ், தேசிய புத்தக நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தமிழகத்தில், முதன் முறையாக, தன் கிளையை திறந்துள்ளது. இதில், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும். இந்த விழாவில், நிறுவனத்தின் தலைவர், சேது மாதவன் பேசுகையில், ""ஐதராபாத், கவுகாத்தி, பாட்னா, அகர்தலா நகரங்களிலும், விரைவில், தேசிய புத்தக நிலையம் திறக்கப்படும். உலக புத்தக கண்காட்சி, வரும், 15 முதல், 23ம் தேதி வரை, டில்லியில் நடக்கிறது. இதில், 30 நாடுகள் பங்கேற்கின்றன. 1,700 அரங்குகள் அமைக்கப்படுகின்றன,'' என, தெரிவித்தார்.

No comments:

Post a Comment