Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 20 February 2014

சரியாக பணிக்கு வராத ஆசிரியர் "சஸ்பெண்ட்'

 பள்ளிக்குச் சரியாக வராமல் இருந்த, பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர், திருமூர்த்தி, 45. இவர், சரியாக பள்ளிக்கு வருவதில்லை என, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு புகார் வந்தது. நேற்று முன்தினம், பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டவர், கணித ஆசிரியர் திருமூர்த்தியின் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைத்தார். அதில், அதிக மாணவர்கள், "பூஜ்யம்' மதிப்பெண் பெற்றனர். அதிர்ச்சியடைந்த தொடக்கக் கல்வி அலுவலர், திருமூர்த்தி குறித்து விசாரணை நடத்தி, வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தார். முறையாக பாடம் நடத்தாமல், மாணவர்கள் கல்வி பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும், முறையாக பதிவேடுகளை பராமரிக்காததாலும், சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வராமல் அலட்சியாக இருந்ததாலும், கணித ஆசிரியர் திருமூர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து, தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment