Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 February 2014

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எச்சரிக்கை

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 6 சங்கங்கள் இணைந்த டிட்டோஜாக் சார்பில் வலியுறுத்தப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி வரும் 22ம் தேதி வேலூரிலும், 23ம் தேதி கடலூரிலும் மார்ச் 1ம் தேதி காலை மதுரையிலும்,மாலை திருச்சியிலும்மார்ச் 2ம் தேதி கோவையிலும்  ஆசிரியர் மன்றத்தின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநிலமாவட்டஒன்றியநகர பொறுப்பாளர்களும்,உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் மார்ச் 6ம் தேதி நடைபெற உள்ள ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்திலும் ஆசிரியர் மன்றத்தினர் முழுஅளவில் கலந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு மார்ச் 6ம் தேதிக்குள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிட்டோஜாக் பொதுக்குழு கூடி அடுத்தகட்டமாக காலவரையற்ற போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் மன்றம் டிட்டோஜாக்கிற்கு பரிந்துரை செய்கிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிகாரபூர்வமான அறிவிப்பு வருவதற்குள் தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால்நாடாளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சிக்கு செயல் அளவில் பாடம் புகட்ட டிட்டோஜாக் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment